Wednesday, November 4, 2009

மற்றவர்களும் தங்களைப் போல் சித்தி பெறுவது அரிதாகும்

வினா: சுவாமிஜி, தாங்கள் சித்தி பெற்று இருப்பது தங்களின் தவ வலிமை அல்லது ஊழ் அல்லாமல் வேறொன்றுமில்லை என்று கருதுகிறேன். மற்றவர்களும் தங்களைப் போல் சித்தி பெறுவது அரிதாகும் என்பது எனது தாழ்மையான எண்ணம்?

மகரிஷியின் விடை:

அன்பரே, ஊழ் என்பது முன்பிறவியில் செய்த வினை அல்லது பழவினை என்பதாகும். தவவலிமை என்பது இப்பிறவியில் முயற்சி செய்து பெற்ற உயிர்த்தூய்மை என்பதாகும். தவ வலிமையால் நான் உயர்ந்துள்ளதாக நீங்கள் ஒப்புக் கொண்டல் இப்பிறவியில் நீங்கள் செய்யும் தவப்பயிற்சி வரும் பிறவியில் உங்கள் குழந்தைகளுக்கு ஊழ் வினையாக நலம் தராதா ? உங்கள் வினாவிலேயே விடையும் உள்ளதே.

No comments:

Post a Comment