Tuesday, November 3, 2009

நான் தத்துவ ஆராச்சி செய்ய நினைக்கிறேன்

வினா: ஐயா, நான் தத்துவ ஆராச்சி செய்ய நினைக்கிறேன். எனக்கு அறிவுரை கூறுங்கள் ?

மகரிஷியின் விடை:

ஐந்து அடி உயரம் உள்ள தந்தை அவரைப் பந்தலில் காய் பறிக்கிறார். அவருக்கு காய் எட்டவில்லை. அருகில் இருந்த அவரது ஐந்து வயது மகன், "அப்பா நான் காய் பறித்து தருகிறேன்", என்கிறான். "உன்னால் எப்படி முடியும்", என்கிறார் தந்தை. அதற்கு அவன், "என்னைத் தூக்கி உங்கள் தோளில் அமர்த்திக் கொள்ளுங்கள்" என்கிறான்.

தந்தையும் அவ்வாறே செய்ய மகன் எளிதாகக் காய் பறித்து கொடுக்கின்றான். அன்பரே, என்னுடைய 89 ஆண்டுகால வாழ்க்கையில் இளமைப் பிராயமான 20 ஆண்டுகளைக் கழித்து விட்டால் 69 ஆண்டுகள் ஆன்மீக வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவத்தை, ஆராச்சியை உங்களுக்கு கொடுத்துள்ளேன். தவ முறைகளும், தத்துவமும் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைத்துள்ளேன்.

இதை நீங்கள் பயிற்சி செய்து வாழ்வின் நோக்கத்தை உணரலாம். உடல் நலம், மன நலம் பெற்று சிறப்பாக வாழலாம். அதற்கு மேல் உங்கள் ஆராச்சியை அமைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment