Wednesday, September 23, 2009

நல்லமுறையில் வாழும்போதே சில சமயம் சிக்கல்.இதை மாற்ற இயலுமா?

வினா:

சுவாமிஜி, நல்லமுறையில் வாழும்போதே சில சமயம் சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம். இதற்குக் காரணம் என்ன ? இதை மாற்ற இயலுமா ?

மகரிஷியின் விடை:

வாழ்கைச் சிக்கல்கள் மூன்று காரணங்களால் ஏற்படுகின்றன.1.ஆகாமியம் 2.பிராரப்தம் 3.சஞ்சிதம்.

சஞ்சிதம் என்பது முன்னோர்களின் செயல் பதிவுகள். தலைமுறை தலைமுறையாக கருவழியே தொடரும் பாவப் பதிவுகளாகும். அதை அனுபவித்து தீர்க்கவே உடல் எடுத்து வந்துள்ளோம். அவரவர் வாழ்வில் தவறு செய்திராவிட்டாலும் முன் வினையின் காரணமாக துன்பம் அனுபவிக்க வேண்டிவரும். "இப்பிறவி" என்பது உயிரின் பரிமாணத்தில் ஒரு சிறு பகுதியே. எதிர்பாராது வரும் சிக்கல்களுக்கு இம்முன் வினைகளே காரணம். தவமும் அறமும் இணைந்த அருள் வாழ்வு மூலம் தான் இதனை மாற்ற இயலும்.

No comments:

Post a Comment