Monday, September 14, 2009
நீங்கள் பெண்களை உயர்த்திப் பேசி....
வினா:
ஐயா, நீங்கள் பெண்களை உயர்த்திப் பேசி அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றீகள் இது சரியாய் ?
மகரிஷியின் விடை:
நீங்கள் இந்த உலகத்திற்க்கு எப்படி வந்தீர்கள்? உங்களை ஒரு பெண் அல்லவா தன் வயிற்றில் பத்து மாதம் வைத்து காத்து உருவாக்கினாள்! அப்பொழுது அவள் உண்ட உணவை, அவள் சுவாசித்த காற்றை அல்லவா நீங்கள் பங்கிட்டுக் கொண்டீர்கள்? மேலும் முதலில் இந்த உலகிற்கு வந்தீர்களே, அங்கு உங்களுக்கு தன் இரத்தத்தை அல்லவா பாலாக மாற்றி முதல் உணவாக அளித்தாள்.
நாம் கடைகளில் சென்று ஒரு புதிய வாகனம் வாங்கும் பொழுது அந்தக் கம்பெனியே உங்களுக்கு முதல் பெட்ரொலை இட்டு நிரப்பி நீங்கள் சிறிது தூரம் வாகனத்தை இயக்குவதற்கு உதவி செய்வது போல், தாய் தானே உங்களக்கு தன் இரத்தத்தைப் பாலாக்கி முதல் உணவு (Fuel) அளித்து நீங்கள் உயிர்வாழ உதவினாள். அதற்கு மேலும் பல மாதங்கள் அந்த தாயின் பாலைக் குடித்துத்தானே வளர்ந்தீர்கள்.
"அந்தப் பெண்மைதானே உங்களுக்கு வாழ்கைத் துணையாகவும் வந்து வாழ்நாள் முழுவதும் உங்கள் இன்ப, துன்பங்களில் பங்கு கொண்டு நீங்கள் வீடுபேறு அடையவும் உதவுகின்றாள். இதில் ஏதாவது ஒன்றை உங்களால் மறுக்க முடிமா? இவ்வளவு பெருமை வாய்ந்த பெண்ணினத்தை போற்றுவதில் உங்களுக்குக் கஞ்சத்தனமும் பொறுக்க முடியாமையும் ஏன் வரவேண்டும்?"
ஐயா, நீங்கள் பெண்களை உயர்த்திப் பேசி அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றீகள் இது சரியாய் ?
மகரிஷியின் விடை:
நீங்கள் இந்த உலகத்திற்க்கு எப்படி வந்தீர்கள்? உங்களை ஒரு பெண் அல்லவா தன் வயிற்றில் பத்து மாதம் வைத்து காத்து உருவாக்கினாள்! அப்பொழுது அவள் உண்ட உணவை, அவள் சுவாசித்த காற்றை அல்லவா நீங்கள் பங்கிட்டுக் கொண்டீர்கள்? மேலும் முதலில் இந்த உலகிற்கு வந்தீர்களே, அங்கு உங்களுக்கு தன் இரத்தத்தை அல்லவா பாலாக மாற்றி முதல் உணவாக அளித்தாள்.
நாம் கடைகளில் சென்று ஒரு புதிய வாகனம் வாங்கும் பொழுது அந்தக் கம்பெனியே உங்களுக்கு முதல் பெட்ரொலை இட்டு நிரப்பி நீங்கள் சிறிது தூரம் வாகனத்தை இயக்குவதற்கு உதவி செய்வது போல், தாய் தானே உங்களக்கு தன் இரத்தத்தைப் பாலாக்கி முதல் உணவு (Fuel) அளித்து நீங்கள் உயிர்வாழ உதவினாள். அதற்கு மேலும் பல மாதங்கள் அந்த தாயின் பாலைக் குடித்துத்தானே வளர்ந்தீர்கள்.
"அந்தப் பெண்மைதானே உங்களுக்கு வாழ்கைத் துணையாகவும் வந்து வாழ்நாள் முழுவதும் உங்கள் இன்ப, துன்பங்களில் பங்கு கொண்டு நீங்கள் வீடுபேறு அடையவும் உதவுகின்றாள். இதில் ஏதாவது ஒன்றை உங்களால் மறுக்க முடிமா? இவ்வளவு பெருமை வாய்ந்த பெண்ணினத்தை போற்றுவதில் உங்களுக்குக் கஞ்சத்தனமும் பொறுக்க முடியாமையும் ஏன் வரவேண்டும்?"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment