Friday, October 18, 2013

சுத்தவெளிக்கு அப்பால் ஏதாகிலும் உண்டா?

வினா: சுவாமிஜி, இறைவெளி என்பது சுத்தவெளி என்கிறீர்கள். இறைவெளி தான் சுத்தவெளி என்பதை எவ்வாறு உறுதி செய்ய முடியும்? அதற்கு மேல் ஏதாவது உண்டா?

வேதாத்திரி மகரிஷியின் விடை:

எல்லாம் வல்ல இறையே தான் மனிதனுள் அறிவாயும் உள்ளதால், நானும் அந்நிலையில் நின்று தேடித் தேடிப் பார்த்தேன். இதுவரைக்கும் என் அறிவுக்கு எட்டவில்லை. நமது முன்னோர்கள் நீண்ட காலமாகச் சொல்லி வந்த வேதாந்தங்களிளெல்லாம் கூட பிரபஞ்சத்திற்கு அப்பால் ஒன்றுமில்லை... சுத்தவெளி என்கிறார்கள். அதைத்தான் நானும் சொன்னேன்.

இப்போது இருக்கக்கூடியவர்கள் புதிதாக பிரபஞ்சத்திற்கு அப்பால் ஏதாகிலும் கண்டுபிடித்தால் எனக்கும் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment