Thursday, July 10, 2014

மனையடி சாஸ்திரம் அவசியம்தானா?

கேள்வி: "சுவாமிஜி, மனையடி சாஸ்திரம் அவசியம்தானா? இதனுடைய தத்துவம் என்ன?"

வேதாத்திரி மகரிஷியின் பதில்: " நான்கு சுவர்களை அமைக்கும்பொழுது அதற்குள் உண்டாகும் காந்தக்களம் மனிதனுக்கு நன்மை செய்வதாக அமைவதோ அல்லது தீமை விளைவிப்பதாக அமைவதோ உண்டு. என்ன நீள, அகல, உயரத்தில் அறை அமைந்தால் அதில் எவ்வாறு காந்தக்களம் அமையும், அந்தக் காந்தக் களத்தில் வாழும் மனிதர்களுக்கு என்னென்ன நன்மை, தீமைகள் எல்லாம் உண்டாகும் என்று கணக்கிட்டு அறிந்து கூறும் கலைதான் மனையடி சாஸ்திரம். அவ்வாறு நன்மை செய்யக்கூடிய ஒரு காந்தக் களத்தை அமைத்து அதில் வாழ்வது சிறப்பானதே".

No comments:

Post a Comment